நவம்பர் 13ம் தேதி உலகம் அழியும்: புதிய வதந்தியால் பரபரப்பு >> மேலும்வாசிக்க >>>

நவம்பர் 13ம் தேதி உலகம் அழியும்: புதிய வதந்தியால் பரபரப்பு


VIDEO : HUGE MELODRAMA HITS THE TV SHOW SWARAGINI
HUGE MELODRAMA HITS THE TV SHOW SWARAGINI
HUGE MELODRAMA HITS THE TV SHOW SWARAGINI
லண்டன்: வேற்றுக்கிரகத்தில் இருந்து பறந்து வரும் மர்மப்பொருள் பூமியின் மீது மோதி உலகம் அழியும் என்றும் புதிய வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. விண்வெளியில் பல விண்கற்கள் மிதந்தபடி உள்ளன. அவ்வப்போது அவை பூமிக்கு அருகில் வந்து செல்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகின்றன. சில புவியின் ஈர்ப்பு சக்தி காரணமாக பூமியில் விழுந்து நொறுங்குகின்றன. இத்தகைய விண்கற்களால் பூமிக்கு ஆபத்து என அவ்வப்போது தகவல்கள் வருவது வாடிக்கை. அந்தவகையில் தற்போது அடுத்தமாதம் விண்வெளியில் இருந்து பறந்து வரும் மர்மபொருள் ஒன்று பூமியில் மோதப் போகிறது என்ற தகவல் இணையத்தில் பரபரப்பாக உலா வருகிறது.

இந்த மர்மப்பொருளானது வேற்றுகிரகத்தில் இருந்து அனுப்பப்பட்டது எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த மர்மப்பொருள் மோதுவதால் உலகம் அழிந்து விடும் என்றும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து ஆராய்ந்து வரும் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 7 அடி நீளமுள்ள அந்த மர்ம பொருளுக்கு ‘டபிள்யூ. டி. 1190 எப்' என பெயரிடப்பட்டுள்ளது. அது வருகிற நவம்பர் 13-ந் தேதி பூமியில் வந்து மோதும் என்றும், இந்திய பெருங்கடலில் இலங்கை கடற்பகுதியில் விழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
www.kalawewa1.blogspot.com

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பொத்துவில் சகோதரனுக்கு உதவு�


October 27th, 2015 இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பொத்துவில் சகோதரனுக்கு உதவுங்கள் FacebookTwitterGoogle+LinkedInE-mail

මිනිසෙකු ගිලදැමූ දුර්ලබ ගනයේ මාලුවෙක්....

Dubai Living Sri Lankan's http://on.fb.me/1Wg29XV

நாசாவின் புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் நடமாடும் துருவக் கரடி தென்படுகின்றதா?

நாசாவின் புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் நடமாடும் துருவக் கரடி தென்படுகின்றதா?




செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்திவரும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ரோபோ அனுப்பும் புகைப்படங்களை நாசாவைவிட அதிகமாக ஆய்வு செய்யும் யு.எஃப்.ஓ. சைட்டிங்ஸ் டெய்லி என்ற இணையதளம் சமீபத்திய புகைப்படம் ஒன்றில் ரோமத்துடன் உள்ள துருவக் கரடி தென்படுவதாக தெரிவித்துள்ளது.

ரோமத்துடன் உள்ள துருவக் கரடி நிழலின் மூலமாக தெளிவாக தெரிவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் இணையதளத்தில் ஏற்கனவே வெளியான செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களில், நண்டுகள், பெண் உருவம், புத்தர் சிலை போன்றவை தென்படுவதாக இதில் செய்தி வெளியானது, குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக ஆணித்தரமாக நம்பும் ஸ்காட் சி வாரிங், இந்த இணையதளத்தில் ‘நாசா திட்டமிட்டு நமக்கெல்லாம் செவ்வாய் கிரகம் பற்றிய உண்மையான விவரங்கள் தெரியக்கூடாது என்பதற்காகவே, கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை வெளியிடுவதாக’ குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தனது இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிய தகவல்களை, உலகோடு பகிர்வது மட்டுமின்றி ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கி மூன்னுக்கும் இதன் விவரங்களை அனுப்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Dubai Living Sri Lankan's


Dubai Living Sri Lankans News Upload Quickly

Copyright @ 2013 WWW.KALAWEWA.COM.