>> Contact <<
முழுவதுமாக சருமத்தால் மூடப்பட்ட உருவம்தான் மனித உடல். ஒரு மனிதனைப் பார்க்கும் போது, கண்ணுக்கு முதலில் தெரிவது அந்த நபரின் சருமம் தான். அந்த வகையில்,ஒரு மனிதனைப் பொறுத்தவரை சருமம் ஒரு முக்கியமான உறுப்பு என்பதில் சந்தேகமில்லை.
ஒரு மனிதன், அவன் வசிக்கும் பகுதியில் நிலவும் தட்ப வெப்ப நிலை, நாகரிகம், செய்யும் தொழில், பழக்க வழக்கங்கள், அணியும் உடை, உணவுப் பழக்கம் போன்ற பலவற்றைப் பொறுத்து அவனுக்கு சரும நோய்கள் வரக்கூடும். அதேபோல், மனிதனுக்கு மனிதன் வரக்கூடிய நோய்களும் வித்தியாசப்படும்.
அதில் வெண்குஷ்டம் என்ற நோய் பலரை வதைத்துக் கொண்டிருக்கின்றது.
இவர்கள் தமது நோய்க்கு நிவாரணம் தேடும் முயற்சியாக ஆங்கில மருத்துவ முறையில் கைவிடப்பட்ட வெண்குஷ்ட நோயை ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவ முறைகளால் குணப்படுத்தலாம் என்கிறார் ஆயுர்வேத வைத்திய நிபுணர் டாக்டர் கலாவெவ என்.நபீஸ்தீன்.
இவர்கள் தமது நோய்க்கு நிவாரணம் தேடும் முயற்சியாக ஆங்கில மருத்துவ முறையில் கைவிடப்பட்ட வெண்குஷ்ட நோயை ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவ முறைகளால் குணப்படுத்தலாம் என்கிறார் ஆயுர்வேத வைத்திய நிபுணர் டாக்டர் கலாவெவ என்.நபீஸ்தீன்.
வெண்குஷ்டம் பற்றி சிறு விளக்கம் தாருங்கள்?
சருமத்தின் இயற்கையான நிறம் மாறி இ உடம்பில் ஒவ்வொரு இடத்திலும் சிறுசிறு அளவில் வெண்மையான அடையாளங்கள் அல்லது படை தோன்றி அவை படிப்படியாக உடல் முழுவதும் பரவிச் செல்லும் நிலைமையை வெண் குஷ்டம் என்கின்றோம்.
வெண்குஷ்டத்தை அடையாளம் காணலாம்?
ஒவ்வொரு நாட்டினதும் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்பவே சருமத்தின் நிறம் மாறுதலடைகின்றது. நம்மில் சிலர் சிவப்பாகவும்இ சிலர் கறுப்பாகவும் இருப்பதற்குக் காரணம் நமது சருமத்தினுள் மெலனோசைட் எனப்படும் கலங்கள் தான். இக்கலங்கள் மெலனின் எனப்படும் நிறமியை உற்பத்தி செய்கின்றன. இந்நிறமியே சருமத்துக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. மெலனின் எனப்படும் வர்ண மை தோலில் உற்பத்தியாவது குறைவடையும் போது வெண்குஷ்டம் எனப்படும் தோல் நோய் ஏற்படுகின்றது. சிவப்பாக இருப்பவர்களுக்கு மெலனின் குறைவாகவும்இ கறுப்பாக இருப்பவர்களுக்கு மெலனின் அதிகமாகவும் சுரக்கும் என்பதும்இ இது பரம்பரையாக தொடர்கிறது என்பதும் மருத்துவத்தின் கருத்துக்களாகும்.
இன்று உளவியல் ரீதியாக பலரை வாட்டி வதைக்கும்இ தோலின்
வெண் குஷ்டத்தைப் பூரணமாகச் சுகமாக்குவதில் நவீன மருத்துவத்துறை பின்னடைந்திருந்தாலும் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்துறை இதற்கு நிவாரணமளிக்கின்றது. வெண்குஷ்டம் ஏற்படுவதற்கான காரணங்களை அனுபவ ரீதியாக ஒழுங்காகக் கண்டறிந்து பூரணமான சிகிச்சை மூலம் அதைக் குணப்படுத்த முடியும்.
வெண்குஷ்டத்திற்கான விசேடஅறிகுறிகள் உண்டா?
வெண்குஷ்டமானது முதலில் உதடுகள், புருவம், விரல்கள்,தலை, கை, கால், முகம் மற்றும் உடலின் அனைத்துப் பாகங்களிலும் பரவிவிடும். இந்நோய் மூலம் உடலுக்கு எதுவித வலியோ, வேதனையோ இல்லாவிட்டாலும் இது ஒரு குறையாகவே தோன்றுவது தவிர்க்க முடியாது. இந் நோய் மூலம் அழகும், பொலிவும் கெட்டு விடுவதே இதற்கு மூலக் காரணமாக அமைந்துள்ளது.
வெண்குஷ்டமானது கலங்களில் மெலனின் எனப்படும் நிறமிகள் குறைவடை வதற்கும், அதிகமா வதற்கும் குறிப்பிட்ட காரணம் ஏதும் இல்லை என்றும், இயற்கையே காரணமென்றும் சில மருத்துவ முறைகளில் குறிப்பிடப்படுகின்ற போதிலும்இ பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறையில் அனுபவ ரீதியாக முன் வைக்கப்படுகின்றன.
பூனைஇ எலி மற்றும் பாம்பு போன்ற உயிரினங்கள் கடித்தாலோ அல்லது அவை உண்ட உணவுகளை உண்டாலோ வெண் குஷ்டம் ஏற்பட காரணமாக அமைகிறது. ஆனால், இதனை நவீன மருத்துவம் ஏற்றுக் கொள்வதில்லை. இருந்த போதிலும் இ வெண்குஷ்டம் ஏற்பட்ட பலர் தமக்கு பூனை அல்லது எலி கடித்த பின் தான் வெண்குஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
வாதம்இ பித்தம்இ கபம் என்கின்ற முத்தோஷங்களின் மூலமும் இந்த வெண் குஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவதுஇ வாதத்தினால் தோன்றும் வெண்குஷ்டத்தை தொடுகையின் மூலம் கண்டறிய முடியும்.
இது சில சந்தர்ப்பங்களில் நிற மாற்றமும் அடையும். சில சந்தர்ப்பங்களில் மருந்துகள் பாவிக்கும் போது வலி கூடக் காணப்படும். பித்தத்தினால் தோன்றும் வெண்குஷ்டம் மிக மென்மையானதாக தாமரைப் பூவின் வெளிப்பக்க நிறம் போல காணப்படும். சில பித்த வெண்குஷ்ட அடையாளம் வெயிலில் போகும் போது சாதாரண எரிவுடன் செம்பொறி போன்று காணப்படுவதும் தவிர்க்க முடியாதது. சளியினால் அல்லது கபத்தினால் தோன்றும் வெண்குஷ்டம் வெண்மையாகக் காணப்படும். சில நேரம் அந்த அடையாளம் இல்லாதது போல் தோன்றும். பொதுவாகச் சிறிது நமைச்சல் தன்மையுள்ளதாகவே இருக்கும்.
வெண்குஷ்டம் நோய்க்கான படிமுறைகள் அல்லது நிலைகள் பற்றி விளக்கம் தாருங்கள்?
முதலாம் நிலை: முதலில் சிறிது சிறிதாக ஒரு சில இடங்களில் மட்டும் புள்ளி போன்று ஆரம்பிக்கும் நிலையில் உடனடி சிகிச்சை வழங்கினால் ஓரிரு வாரங்களில் சுகமாகிவிடும்.
இரண்டாம் நிலை: ஆரம்பநிலை கவனயீனமாக இருந்தால் பல இடங்களில் பரவும், இதற்கு ஓரிரு மாதங்கள் சிகிச்சை வழங்க வேண்டும்.
மூன்றாம் நிலை: இரண்டாம் நிலையில் ஒழுங்கான சிகிச்சை அளிக்கப்படாமல் காலதாமதமானாலும் பலவகை மருந்துகள் உபயோகிக்கப்பட்டதனாலும் முற்றிய நிலை. இந்நிலையில் இளவயதினரின் 90 வீதமானவரை பூரண குணமாக்கலாம். வயதானவர்கள் மற்றும் பலவீனமானவர்களுக்கும் முக்கியமான மென் பகுதிகளான முகம் உட்பட பல பகுதிகளைக் குணமடையச் செய்வதோடு, வேறு இடங்களில் பரவாமல் தடுக்கலாம்.
பொதுவாக நோய்க்குள்ளானவர்களுக்கு வலிஇ அரிப்புஇ எரிச்சல் இருக்காது. இதனால் நோயாளிக்கு ஓய்வு தேவையில்லை. அன்றாட அலுவல்கள்இ கடமைகள் செவ்வனே செய்யலாம். எப்படியான வெண் குஷ்டம் ஆயினும் சரிஇ உரிய காரணத்தைக் கண்டறிந்த கால தாமதமின்றி சிகிச்சை செய்தால் சில மாதங்களில் சுகமடையச் செய்யலாம். அண்மைக் காலங்களில் நோயைப் பூரணமாகச் சுகமாக்கும் முயற்சியில் ஆயுர்வேத மருத்துவ முறை நல்ல பலனை வழங்கியுள்ளது.
இந்த நோய் ஆண் பெண் இருபாலாருக்கும் எந்த வகையில் பாதிக்கின்றது?
வெண்குஷ்டமானது மன அழுத்தம் காரணமாக ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக இருந்து வரும் நோய்கள்இ சருமங்களில் ஏற்படும் ஊறுகள்இ பரம்பரைக் காரணிகள்இ எதிர்பாராத விதமாக ஏற்படும் அதிர்ச்சிகள்இ தீராத அடிக்கடி உண்டாகும் கஷ்டங்கள் போன்ற காரணங்களும் மெலனின் குறைவடையக் காரணமாகலாம். நோயுள்ள ஆண்களையும்இ பெண்களையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியபோது நோய் சம்பந்தமாக விரக்தியடைந்தவர்களுக்கே நோய் வேகமாய்ப் பரவும் வாய்ப்பு அதிகம் என்பது தெரியவந்தது.
வெண்குஷ்டம் பரம்பரை நோயா?
இந் நோய்க்குப் பரம்பரை முக்கிய காரணியாகக் கருதப்படுகின்றது. தாய் வழியிலோஇ தந்தை வழியிலோ பரம்பரையாக இந்நோய் ஏற்படலாம். அதிகமாக மூன்றாவது பரம்பரையைக் கூட வெண்குஷ்டம் தாக்குகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
உடம்பில் நச்சுத்தன்மை தங்கியிருத்தல், மருந்துகளும் உணவுப் பொருட்களும் ஒவ்வாமையின் காரணமாக நச்சுத் தன்மையடைந்திருந்தால் வெண்குஷ்டம் ஏற்படுகின்றது.
இந்நோய்க்கு சூழலின் தாக்கம் உள்ளதா?
வெயில் அல்லது சூரிய வெப்பத்தினால் சூடாகும் நீரில் குளிப்பதினால் வெண் புள்ளிகள் உண்டாகலாம் என்று அரபு நாட்டு வைத்திய முறைகள் தெரிவிக்கின்றன. சூரியக் கதிரால் ஒவ்வாமை (Sun Alegy) ஏற்படுவதுண்டு. உடலின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் போது அரிப்புஇ எரிச்சல், தடிப்பு ஏற்படுவதுண்டு. நாளடைவில் அது வெண் புள்ளிகளாக மாறலாம். அதேபோல் சூரிய ஒளிக்கதிர்கள் நீரில் சென்றடையும் போது மருத்துவக் குணங்கள் பாதிக்கப்பட்டு ஒவ்வாமை ஏற்படலாம் என அம் மருத்துவம் கூறியுள்ளது.
உணவுப் பாவனையின் தாக்கம் இந்நோய் ஏற்படக் காரணமாக அமையுமா?
செம்புப் பாத்திரத்தில் நீண்ட நேரம் வைக்கப்பட்ட உணவு வகைகளை உண்டாலும் வெண்குஷ்டம் ஏற்படுகின்றது என்பது கிராமத்தவர்களின் கருத்து. உண்ட உணவு ஜீரணிக்காது விட்டாலும் உடல் முழுவதும் அசுத்தமாகிவிடுகிறது.
இந்த அசுத்தம் சளி மூலம் இரத்தத்தில் கலப்பதன் மூலம் வெண்குஷ்டம் ஏற்படுகிறது.அசுத்தமான இரத்தம். குளிர்ச்சியான இரத்தம் ஆகியவையும் வெண்குஷ்டம் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளன.
இவ்வாறான காரணங்களினால் ஏற்படுகின்ற வெண்குஷ்டமானது பிரதான இரண்டு வகைகளாகக் காணப்படுகின்றது. சருமத்தில் சிறு பகுதி மட்டும் பாதிப்பது ஒன்றுஇ மற்றையது உடல் முழுவதும் பாதிப்பது.
சிலருக்கு இந் நோய் ஏற்பட்டால் சருமத்தில் காணப்படும் முடிகள் வெள்ளையாகவும், சிலருக்குக் கறுப்பாகவும் காணப்படும். சிலருடைய சருமம் சிவப்பு கலந்த வெள்ளையாகவும் அல்லது இரத்தம் சார்ந்த நிறமாகவும் காணப்படும். சிலருடைய சருமம் தூய வெண்மையாகவும் தோற்றமளிக்கும். ஒவ்வொரு வகை வெண்குஷ்டத்திற்கும் வெவ்வேறான சிகிச்சை முறைகள் அளிக்கப்படுகின்றன.
வெண்குஷ்டம் நோயானது உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது வைத்தியர் என்ற வகையில் நீங்கள் என்ன கூற விரும்பு கின்றீர்கள்?
ஆரோக்கியமான மனிதர்களின் உடலில் கூட இலேசான வெண் புள்ளிகள் ஏற்படுவதுண்டு. அவை பற்றி உடனுக்குடன் கவனிக்காது விட்டால் நாளடைவில் உதடுகள்,புருவம், விரல்கள், தலை, கை, கால், முகம் மற்றும் உடலின் அனைத்துப் பாகங்களிலும் இது பரவிவிடும். இந்நோய் மூலம் உடலுக்கு எதுவித வலியோ,வேதனையோ இல்லாவிட்டாலும் இது ஒரு குறையாகவே தோன்றுவது தவிர்க்க முடியாது. இந் நோய் மூலம் அழகும், பொலிவும் பாதிக்கப்படுவதே இதற்குக் காரணம்.
வெண்குஷ்ட நோயினால் சிலர் தற் கொலை எண்ணம் கொண்டவர்களாகவும் தம்மை ஆக்கிக் கொள்கின்றனர். இவ் வாறானவர்களின் நோயின் தன்மை கவலையின் காரணமாக நோய் பரவும் நிலை அதிகரிக்குமே ஒழிய நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது. ஆகவேஇ வீண் கற்பனைகளைத் தவிர்த்து சந்தோஷமாக இருப்பதன் மூலம் இந் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
வெண்குஷ்டம் ஒரு தொற்றுநோய், திருமணத்தின் பின் நோயின் பரவும் தன்மை அதிகரிக்கும் என்கின்ற தவறான எண்ணங்களினால் பலரின் குடும்ப வாழ்க்கை கூட பாதிப்படைகின்றது. இந்த மூட நம்பிக்கையை தவிர்த்து நல்ல சிகிச்சை பெற்று நலமாகலாம்.
தொடர்புகளுக்கு:
வைத்திய கலாவெவ என்.நபீஸ்தீன்,
தொ.பே. :0777801491,
இல.82 ,நேற்றிவ் ஆயுர்வேதிக் ஹோம்,
கலாவெவ,விஜிதபுர, அநுராதபுரம்.
- See more at: www.vitiligolanka.comவைத்திய கலாவெவ என்.நபீஸ்தீன்,
தொ.பே. :0777801491,
இல.82 ,நேற்றிவ் ஆயுர்வேதிக் ஹோம்,
கலாவெவ,விஜிதபுர, அநுராதபுரம்.